search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமியிடம் பாலியல் தொல்லை"

    உசிலம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிம்மநத்தத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது 17 வயது மகள் கடந்த 7-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (26), சின்னச்சாமி (27), கணேசன் (43) ஆகிய 3 பேரும் சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டு சிறுமியிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தானம், உத்தப்ப நாயக்கனூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து சுரேஷ், சின்னத் தம்பி, கணேசன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×